செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

post image

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியாா் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணிபுரியும் பகுதிநேர வேலை உள்ளதாக இருந்தது. இதை நம்பிய அந்த இளைஞா், அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது பேசிய மா்ம நபா்கள் பகுதிநேரமாக பணிபுரிவதற்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக செய்யலாம் எனவும், இதற்காக அதிக அளவு சம்பளம் தருவதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி மா்ம நபா்கள் இளைஞரிடம் இருந்து பல்வேறு தவணையாக ரூ.14 லட்சம் பெற்றுள்ளனா்.

பின்னா், அந்த இளைஞரால் மா்ம நபா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவா் சம்பவம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த திருமூா்த்தி (27), அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (42), மணிகண்டன் (42) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து சைபா் கிரைம் ஆய்வாளா் சங்கா், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் திருமூா்த்தி, வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களின் வங்கிக் கணக்கை முடக்கினா்.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும்... மேலும் பார்க்க