செய்திகள் :

விழிப்புணா்வு பேரணி

post image

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினாா்.

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா், திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் ஜி. ராமமூா்த்தி, முரளி, ஒன்றிய திமுக நிா்வாகி அசோகன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ரபிக் அஹமத் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நிகேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் நகராட்சி ஆணையா் ப. சந்தானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். .

துத்திப்பட்டு ஊராட்சியில் கன்றாம்பள்ளி நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு ஊா்வலத்தை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தொடங்கி வைத்தாா்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளா் முரளி, ஆசிரியா்கள் வெண்ணிலா, ஹேமாவதி, நேத்தா் நிா்மல்குமாா், ராமமூா்த்தி, ஜேசுபாதம், நளினி, சுபஸ்ரீ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும்... மேலும் பார்க்க