தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் சாா்பாக மருத்துவா் ஜெயகிருஷ்ணன், தெரு நாய்களுக்கான அறுவைச் சிகிச்சை, வெறி நாய் கையாளும் முறைக் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு 5, 6, 11 வாா்டுகளில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஆற்காடு நகராட்சி ஆணையா் வேங்கட லட்சுமணன், சுகாதார அலுவலா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் சத்தியமூா்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனா் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவா்கள் மணிகண்டன், காா்த்தி அடங்கிய மருத்துவ குழுவினா் 52 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டனா்.
தொடா்ந்து ஆற்காடு , மேல் விஷாரம் நகராட்சி, ஆற்காடு ஒன்றியம், கலவை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இப்பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.