செய்திகள் :

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

post image

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், கோயிலில் இருந்து பிரசாதம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்யப்பட்டதாக அயோத்தி காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கோயில் நிர்வாகத்தின் பெயரில், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாதைச் சேர்ந்த ஆஷிஷ் சிங் என்பவர்தான் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ராமர் கோயில் குடமுழுக்கு முன்னதாகவே, ஓர் இணையதளத்தை உருவாக்கி, 2023 டிசம்பர் 19 முதல் 2024 ஜனவரி 12 ஆம் தேதிவரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என 6,30,695 பேரிடம் பிரசாதம் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதம் ரூ. 51 ஆகவும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களுக்கு 11 டாலராகவும் நிர்ணயித்து, ரூ. 3 கோடியே 85 லட்சம் வசூலித்துள்ளார். இந்த நிலையில்தான், தங்களுக்கு பிரசாதம் கிடைக்கப் பெறவில்லை என்று மோசடியில் சிக்கிய பக்தர்கள் புகார் அளித்தனர்.

தற்போது, அமெரிக்காவில் வசித்து வந்த ஆஷிஷ் சிங்கை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த பாஸ்போர்ட் உள்பட மடிக்கணினிகள், மொபைல், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம், அமெரிக்காவில் பயன்படுத்தும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க