செய்திகள் :

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

post image

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்திரித் தோப்பு அருகே உள்ளது. அந்த நிலத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறாா். இதை அவரது தாய் சுசீலா (80) என்பவா், அங்கு தங்கி கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கத்திவாடி கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (19) என்ற இளைஞா் மது போதையில் செவ்வாய்க்கிழமை அந்த செங்கல்சூளை தோப்புக்குச் சென்றுள்ளா். அப்போது, அங்கிருந்த மூதாட்டி சுசிலாவிடம் தகராறு செய்து துன்புறுத்தி, பாலியல் தொந்தரவு செய்து அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

அவரை தரதரவென இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சுசிலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க