செய்திகள் :

இந்திய அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் காலமானார்.. அணுசக்தி துறையில் அவரது சாதனைகள்

post image

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருது வென்ற இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி விஞ்ஞானி எம் ஆர் ஸ்ரீனிவாசன்.

எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என அழைக்கப்படும் மாலூர் ராமசுவாமி ஸ்ரீனிவாசன் 1930 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். மைசூரில் உள்ள இடைநிலைக் கல்லூரியில் அறிவியல் பிரிவில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இயற்பியல் மற்றும் இயந்திர பொறியியல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் அந்த பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை 1952-ல் முடித்துள்ளார். 1955 ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்த எம் ஆர் ஸ்ரீனிவாசன் அணுசக்தி ஆராய்ச்சியின் உச்சத்தை எட்டி இருக்கிறார்.

இந்திய அணுசக்தி துறையில் எம். ஆர் சீனிவாசனின் பங்கு குறித்து தெரிவித்த அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், "அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான டாக்டர் எம். ஆர். ஸ்ரீனிவாசன் காலமானார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவர் மே 20- 2025 அன்று தனது 95 வயதில் காலமானார்.

அணுசக்தி விஞ்ஞானி எம் ஆர் ஸ்ரீனிவாசன்.

டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955 -ல் அணுசக்தித் துறையில் (DAE) சேர்ந்தார். மேலும், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து தனது பணியைத் தீவிரமாகத் தொடங்கினார்.

ஆகஸ்ட் 1956 -ல் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பணியாக இருந்தது.

ஆகஸ்ட் 1959 -ல் இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

1967- ல்‌ மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய பதவிகளை வகித்தார்.

1974 - ம் ஆண்டு அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984- ல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.

அணுசக்தி விஞ்ஞானி எம் ஆர் ஸ்ரீனிவாசன்.

1987 -ம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) நிறுவனர்-தலைவராக ஆனார்.

அவரது தலைமையின் கீழ் 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயரிய விருதுகள் வழங்கப்பட்டது.

இந்திய அணுசக்தி துறையில் அவரின் பங்களிப்பு வருங்கால தலைமுறைகளால் எப்போதும் நினைவு கூறப்படும்" என்று தெரிவித்தனர்.

பகலில் வெள்ளை, இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்கள்.. காரணம் என்ன?

பகலில் வெள்ளை நிறத்தில் இருக்கும் சில காளான்கள் இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் ஒளிர்வதை, மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். உயிரொளிர் (bioluminescence) உயிரினங்கள், கடலில் தான் அதிக இருப்பதாக... மேலும் பார்க்க

`அணு ஆயுத கதிர்வீச்சில் கரப்பான் பூச்சிகளால் தப்பிக்க முடியுமா?' - உண்மை என்ன?

போரின்போது பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்களின் கதிர்வீச்சிலிருந்து கரப்பான் பூச்சிகள் தப்பித்து உயிர் பிழைக்கும் தகுதி உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. உண்மையில் அணு கதிர்வீச்சை தாங்கும் சக்தி கரப... மேலும் பார்க்க

டைரனோசொரஸ்: அழிந்துபோன மிருகத்தின் தோல் மூலம் ஆடம்பர பொருட்கள் தயாரிக்க திட்டம் - எப்படி சாத்தியம்?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த பிரமாண்ட மிருகமான டைரனோசொரஸ் ரெக்ஸ் (டைனோசரின் ஒரு இனமாகும்), கால மாற்றத்தால் தற்போது உயிருடன் இல்லை. டைரனோசொரஸ் (டி ரெக்ஸ்) மிருகத்தின் டிஎன்ஏவிலி... மேலும் பார்க்க

ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

பொதுவாக உடலைக் குறைக்க, உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு எனப் பல விஷயங்களைச் செய்வார்கள். ஆனால் ஒலி அலைகளால் உடலைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பானிய ஆராய்ச்சியாள... மேலும் பார்க்க

உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண... மேலும் பார்க்க

`மாம்பழம்' பழங்களின் அரசனாக இருப்பது ஏன்? மா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மாம்பழத்தை பழங்களின் அரசன் என வழங்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் சுவை உலகம் முழுவதும் மக்களை ஈர்ப்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் தன்னை சிறந்த பழமாக... மேலும் பார்க்க