செய்திகள் :

காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

post image

திருப்பூர் அடுத்த காங்கயத்தில் மரத்தில் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் ஜானகி (வயது 42). இவரது கணவர் ராஜா (46), மூத்த மகள் ஹேமிநேத்ரா (15) மற்றும் இளைய மகள் மெளன ஸ்ரீ (10) ஆகியோருடன் சொந்த ஊரான கேரளத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் அரச்சலூருக்கு காரில் திரும்பியுள்ளார்.

காங்கயம் வழியாக அரச்சலூர் சென்றுகொண்டிருந்தபோது நத்தக்காடையூர் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ராஜா, ஜானகி மற்றும் ஹேமிநேத்ரா ஆகியோர் சம்பவ உயிரிழந்தனர். இளைய மகள் மெளன ஸ்ரீ மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து நடந்த காரில் இருந்து ஏராளமான நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

தாராபுரத்தில் இன்றுமுதல் 7 நாள்களுக்கு ஜமாபந்தி

தாராபுரத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற உள்ளது. தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்த டெய்லா் கைது

மனைவியுடன் தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை அடிக்கடி தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த டெய்லரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், நொச்சிப்பாளையம் அபிராமி நக... மேலும் பார்க்க

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடிரென தீப்பிடித்து எரிந்தது. பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு காரில் சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊா் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலையத்துக்குள்பட்ட விஜயாபுரம் பகுதியில் தனியாா் வங்கியின... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை பயன்பாட்டை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மின்சார வாரியம் வெள்ளக்கோவில் உப கோட்டத்து... மேலும் பார்க்க