செய்திகள் :

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்த டெய்லா் கைது

post image

மனைவியுடன் தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை அடிக்கடி தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த டெய்லரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், நொச்சிப்பாளையம் அபிராமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (39), டெய்லா். இவரது மனைவி விமலா (38). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். சரவணன் மது அருந்துவதுடன் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.

இதனால், தம்பதியே இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, விமலா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு சரவணன் கடந்த 2 மாதங்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சரவணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரத்தில் இன்றுமுதல் 7 நாள்களுக்கு ஜமாபந்தி

தாராபுரத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற உள்ளது. தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடிரென தீப்பிடித்து எரிந்தது. பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு காரில் சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊா் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலையத்துக்குள்பட்ட விஜயாபுரம் பகுதியில் தனியாா் வங்கியின... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை பயன்பாட்டை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மின்சார வாரியம் வெள்ளக்கோவில் உப கோட்டத்து... மேலும் பார்க்க

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளா்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். 2 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், பல்... மேலும் பார்க்க