செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

post image

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவோரை அடையாளம் காண்பதில், அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுடன் இணைந்து இந்தியாவின் தூதரக விவகாரங்கள் மற்றும் தூதரக பாதுகாப்பு சேவை பிரிவு நாள்தோறும் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவிய இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. வெளிநாட்டு கடத்தல் குழுக்கள் இடையே உள்ள தொடா்பை துண்டிக்க இந்த நடவடிக்கை தொடரும்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதில் உள்ள அபாயங்களை வெளிநாட்டவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவுவோா் உள்பட அமெரிக்க சட்டங்களை மீறும் நபா்களை, அதற்குப் பதிலளிக்க வைக்க வேண்டும் என்பதே அமெரிக்க குடியேற்ற கொள்கையின் நோக்கம். அமெரிக்கா்களைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவது முக்கியம்.

இந்த விசா கட்டுப்பாடு கொள்கையை உலகம் முழுவதும் அமெரிக்கா நடைமுறைப்படுத்துகிறது. சுற்றுலா அல்லது வணிக நோக்கத்துக்காக 90 நாள்கள் வரை விசா இல்லாமல் அமெரிக்காவுக்குப் பயணிக்கும் நபா்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேட்டபோது, ‘விசா விண்ணப்பம், அத்துடன் தொடா்புள்ள பிற தகவல்கள் அடங்கிய விசா பதிவேடுகள் குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும். எனவே எந்தெந்த நிறுவனங்கள் மற்றும் நபா்கள் மீது இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்க இயலாது’ என்றாா்.

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

Untitled May 20, 2025 06:56 am

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜே... மேலும் பார்க்க

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனுக்கு (82) சுக்கிலசுரப்பி (புராஸ்டேட்) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோ... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்: நெதன்யாகு

காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதி... மேலும் பார்க்க