செய்திகள் :

மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை!

post image

ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னௌ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 61-வது போட்டி லக்னௌவின் எக்கானா மைதானத்தில் நேற்றிரவு(மே 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்ற நிலையில், தோல்வியடைந்த லக்னௌ அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், லக்னௌ வீரர் திக்வேஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அபிஷேக் வெளியேறும் போது தனது வழக்கமான பாணியில் திக்வேஷ் கையெழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.

கள நடுவர்கள் மற்றும் அணி வீரர்கள் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். மேலும், அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியின் முடியைப் பிடிப்பது போலவும் சைகை காட்டினார். போட்டி முடிந்ததும் இருவரும் சமாதனமாக மாறி, கை கொடுத்துக் கொண்டனர். பிசிசிஐ துணைப் பொதுச் செயலரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லாவும் இருவரிடமும் சிறிது நேரம் இதுபற்றி பேசி சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் திடலில் மோதிக் கொண்ட லக்னௌ வீரர் திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அபராதம் பெறுவதோ அல்லது சர்ச்சைகளில் சிக்குவது திக்வேஷூக்கு புதிதொன்றும் கிடையாது. இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முறையே 25 மற்றும் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க

மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையான போர்ப் பதற்றம் காரண... மேலும் பார்க்க

மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி: ஹைதராபாதுக்கு 206 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ ச... மேலும் பார்க்க

லக்னௌ பேட்டிங்; பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக... மேலும் பார்க்க