நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம்...
கவாஸகி எலிமினேட்டருக்குப் போட்டியாக ஹோண்டா ரெபல்!
ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஹோண்டா ரெபல் 500 பைக்கை இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட டீலர்கள் மூலம் இந்த வாகன விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஹரியாணாவின் குருகிராமில் ஹோண்டா ரெபல் 500-ன் எக்ஸ் ஸோரும் விலை ரூ.5.12 லட்சமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குருகிராம், பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் பிரத்யேகமாக ஜூன் முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாப்பர் ஸ்டைல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மேட் கன்பவுடர் நிறத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ரெபல் 500-ல் சிறப்பசங்களாக 471 சிசி லிக்விட் கூல்ட் என்ஜின், 4 ஸ்ட்ரோக், 8 வால்வுகளுடன் லிக்விட் கூல்ட் டுவின் சிலிண்டர் என்ஜின், 6 கியர் பாக்ஸ் சிஸ்டம், 45.59 குதிரைத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 500 RPM-ல் 43.3 Nm உடன் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21 கி.மீ. வரை கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!