செய்திகள் :

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

post image

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்த் சரஸ்வதி ஆகியோரின் படங்கள் திறக்கப்பட வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைக் கொறடாவும் ஆகிய அபா வர்மா சபாநாயகரிடம் தனது முன்மொழிவை சமர்பித்தார்.

இந்நிலையில், இந்தப் புதிய முன்மொழிவுக் குறித்து நாளை (மே 21) நடைபெறும் சட்டமன்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அபா வர்மா கூறுகையில், நாட்டின் கடந்த பொற்காலத்தை போற்றும் வகையிலும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தேசத்தின் மீதான நமது பக்தியையும், நன்றியையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, சட்டமன்றத்தை ஒரு துடிப்பான வரலாற்று விழிப்புணர்வினால் ஊக்குவிக்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லியின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, சுமார் 27 ஆண்டுகள் கழித்து அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க