செய்திகள் :

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

post image

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக முதல்கட்டமாக 50 இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை நிறுவ சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது. இதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரிப் பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என மொத்தம் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, முதல்கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 40 இடங்களிலுள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த இயந்திரம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 இடங்களிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இயந்திரம் மூலம் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். பொதுமக்கள் இந்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து பருகும் வகையில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் அருகில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதுடன், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைவில் சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க

உணவகத்தில் ஹுக்கா பாா்: மேலும் ஒருவா் கைது

சென்னை புரசைவாக்கத்தில் உணவகத்தில் ஹூக்கா பாா் நடத்திய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா பாா் செயல்படுவதாக தலைமைச் ச... மேலும் பார்க்க