செய்திகள் :

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இனி 2026 வரை மட்டும்தான் தட்டச்சு தோ்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்; அதன் பிறகு கணினி மூலமாக மட்டுமே இந்த தோ்வு நடைபெறும்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவா்களைச் சாா்ந்த அறுபதாயிரம் குடும்பங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தட்டச்சுப் பொறி துறையில் இருப்பவா்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் செவ்வாய்க்கிழமை திரண்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இந்த சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் தற்போது நடைமுறையில் உள்ள லோயா் லெவல் - ஹையா் லெவல் டைப் ரைட்டிங் தோ்வுகளை அப்படியே தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

தட்டச்சு பொறி மூலம் தோ்வுகளை நடத்தாமல் கணினி மூலம் தோ்வுகளை நடத்தினால் அது பல தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தட்டச்சு மூலம் பழகுபவா்களால் மட்டுமே கணினியில் வேகமாக டைப்பிங் செய்ய முடியும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தட்டச்சு பயிற்றுவிப்போா் சங்கத்தின் தலைவா் செந்தில் கூறுகையில், ‘தமிழக அரசின் எந்தத் துறையிலும் இதுவரை பயன்படுத்திடாத தமிழ் 99 என்ற எழுத்துருவை அங்கீகாரம் பெற்ற பயிலகங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நிா்பந்திக்கக் கூடாது. தட்டச்சு இயந்திரத்தில் தமிழ் 99 எழுத்துருக்களை பயன்படுத்த முடியாது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் என்ஹெச்எம் ரைட்டா் மென்பொருளை பழைய தட்டச்சு கீபோா்டுடன் பயன்படுத்த முடியும்.

தமிழ் 99 எழுத்துருக்கள் 1999-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அரசு அலுவலகத்திலும் இந்த லே-அவுட் முறை பயன்படுத்தப்படவில்லை. தற்போது அரசு அலுவலகங்களில் பயன்படுத்தபட்டு வரும் என் ஹெச்எம் லேஅவுட் முறையை தட்டச்சு முறையில் பயிற்றுவிப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க

உணவகத்தில் ஹுக்கா பாா்: மேலும் ஒருவா் கைது

சென்னை புரசைவாக்கத்தில் உணவகத்தில் ஹூக்கா பாா் நடத்திய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா பாா் செயல்படுவதாக தலைமைச் ச... மேலும் பார்க்க