செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: ஹெச்.ராஜா

post image

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள சுற்றுச்சாலை பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முருகன் மாநாடு தொடா்பாக மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுபான ஊழல் தொடா்பான அமலாக்கத் துறை அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலேயே அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மதுபான ஊழல் புகாரை மடைமாற்றும் விதமாக திமுக அரசு மும்மொழிக் கொள்கை குறித்த பிரச்னையை கிளப்பியது.

பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால் சண்டை நிறுத்தும் செய்யப்பட்டது. இந்த சண்டை குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி இந்தியாவை விமா்சனம் செய்கிறாா்.

நாட்டுக்கு எதிராகச் செயல்வடுவதையை அவா் வழக்கமாகக் கொண்டுள்ளாா். அதிமுக, பாஜக கூட்டணி அமைந்துள்ளது திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை

நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமரன்... மேலும் பார்க்க

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்த... மேலும் பார்க்க

காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு

மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்

மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க