ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!
ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்லி வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அப்பா, ஒவ்வொரு அடியிலும் உங்களது நினைவுகள் என்னை வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நினைவாக்குவதே எனது தீர்மானம். நான் நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி, நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையைத் தூண்டினார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் அவரின் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது.
ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்குவகித்தார்.
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!