செய்திகள் :

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

post image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்லி வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அப்பா, ஒவ்வொரு அடியிலும் உங்களது நினைவுகள் என்னை வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நினைவாக்குவதே எனது தீர்மானம். நான் நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி, நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையைத் தூண்டினார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் அவரின் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது.

ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்குவகித்தார்.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க