செய்திகள் :

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

post image

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று பிபிசி ரேடியோவிடம் பேசிய அவர், ``இஸ்ரேல் 11 வாரங்களாக காஸாப் பகுதியை முற்றுகையிட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையால் எங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையோ, பெரியவர்களையோ சென்றடைய முடியவில்லை.

காஸா
காஸா

கடந்த 19-ம் தேதி மனிதாபிமான உதவிக்காக ஐந்து லாரிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தது. இதைக் கடலில் ஒரு துளி என ஒப்பிடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு உணவளிக்க முயற்சிக்கும்போது, நாங்கள் எல்லா வகையான ஆபத்துகளையும் எதிர்கொள்கிறோம். அடுத்த 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் 14,000 குழந்தைகளை முடிந்தவரை காப்பாற்ற விரும்புகிறேன். உலக நாடுகளும் காஸா பகுதியை மனிதாபிமான உதவிகளால் நிரப்ப வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உணவு மற்றும் தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா

சர்வதேச கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் தொடர்ந்து இடைவிடாமல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து UK, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், இஸ்ரேல் தனது தற்போதைய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல... மேலும் பார்க்க

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

பாபநாசம்பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என்தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச்சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் கா... மேலும் பார்க்க

``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. இரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?

''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதி... மேலும் பார்க்க