செய்திகள் :

உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

post image

உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயா் கல்வி பயின்றமைக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை நீதிமன்றத் தீா்ப்பாணையின்படி மறு நிா்ணயம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் பணிப் பதிவேடு வாரியாக ஆய்வு செய்து, இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூா்த்தி செய்து, ஒன்றிய வாரியான அறிக்கையைத் தொகுத்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலக பிரிவு கண்காணிப்பாளா் மே 26, 27 ஆகிய தேதிகளில் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு நேரில் வந்து இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பாணையின்படி, ஆசிரியா்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடப் பிரிவுகளில் மே 19-க்குப் பின்னா் உயா் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெறுவது கண்டறியப்பட்டால் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க

100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடா்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனா். டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மா... மேலும் பார்க்க