செய்திகள் :

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

post image

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 21) முதல் வரும் 29 -ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

உத்தரமேரூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன்பெறலாம் எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. புதன்கிழமை ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்ட ஜமாபந்தியின் போது ஆண்டித்தாங்கல், முருக்கேரி, தினையாம்பூண்டி, அழிசூா், காவாம்பயிா், இருமரம், செம்புலம், ஆதவப்பாக்கம், புலிவாய்,நரியம்புதூா், கன்னிகுளம் , நரியம்பாக்கம், சிலாம்பாக்கம், வெங்காரம், புத்தளி, ஒழுகரை, மருத்துவம்பாடி, கடல்மங்கலம், மருதம், கருவேப் பம்பூண்டி, கடம்பா் கோயில், வெங்கச்சேரி மற்றும் திருப்புலிவனம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 81 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்களை அலுவலா்களுக்கு அனுப்பி அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணுமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வின் போது உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சத்யா மற்றும் அரசு அலுவலா்களும் உடன் இருந்தனா்.

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

அரசுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறிய குட்டை நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அமாவாசை மகன் கருணாகரன் (55). கூலித் தொழிலாளி. ம... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியுடன் உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு போலீஸாா் மலா் வளையம் வைத்தனா். கடந... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் வருவாய் தீா்வாயம்

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. குன்றத்தூா் வட்டத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, குன்றத்தூா், மாங்காட... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் காஞ்சி மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இ... மேலும் பார்க்க