செய்திகள் :

10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

post image

10 முதல்வர்களை உருவாக்கிய நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் என பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார்.

இதையடுத்து பிகார் வளர்ச்சிக்காக கடந்த 2022ல் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) பிகார் மாநிலம் சரண் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

“நான் முதல்வராக வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. என் உழைப்பால் 10 முதல்வர்களை உருவாக்கியிருக்கிறேன். இன்று நான் கடுமையாக உழைப்பது நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். ஹரியாணா, பஞ்சாபில் இருந்து வேலைக்காக மக்கள் பிகாருக்கு எப்போது வருகிறார்களோ அப்போதுதான் என் கனவு நிறைவேறும். அப்போதுதான் பிகார் வளர்ச்சியடைந்ததாக நான் கருதுவேன்" என்று கூறியுள்ளார்.

பிகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்

புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூர... மேலும் பார்க்க

'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்... மேலும் பார்க்க

2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!

மும்பையிலுள்ள பிரபல் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பா... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-ப... மேலும் பார்க்க

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் கொள்கைகள் இன்னும் முடியவில்லை, அதன் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவ... மேலும் பார்க்க