செய்திகள் :

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

post image

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் காஸா பகுதிக்குள் செல்லும் உலக நாடுகளின் உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக ஐ.நா குற்றம்சாட்டியது. அது தொடர்பாக ஐ.நா-வின் மனிதாபிமான உதவிகள் அமைப்பின் தலைவர் டாம் பிளெட்சர், ``காஸாவில் உதவித் தேவைப்படுபவர்கள் அதிகமிருக்கிறார்கள்.

காஸா

பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்டக் குறைபாடுகளாலும், போரால் ஏற்பட்ட காயங்களாலும் மரணப்பிடியில் இருக்கின்றனர். 14,000 குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. சரியான நேரத்தில் உதவிகளை வழங்க வேண்டும் என கடுமையாகப் போராடுகிறோம். ஆனால், உதவி வழங்குபவர்களுக்கும் ஆபத்தான சூழலே இருக்கிறது. தற்போது உலக நாடுகளின் உதவி காஸாவுக்கு அவசியம்" என வெளிப்படையாகப் பேசினார்.

இந்த நிலையில், சீனா காஸா பகுதிக்குள் வான் வழியே உதவிகளை வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அது உண்மைதானா என்றக் கேள்விகளும் ஊடகத்தில் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக DW செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு அந்த வீடியோவை சரிபார்த்தது. அது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``காஸாவுக்கு அதிக உதவிகள் தேவை என்ற கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு போலி, தவறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

UN

இதில் சீனா வான் வழியே உதவிகள் வழங்குவது போன்ற வீடியோ அதிகம் விவாதத்துக்குள்ளானது. அந்த வீடியோ மே 17, 2025 அன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு, சுமார் 10,000 பார்வையாளர்களை சென்று சேர்ந்திருக்கிறது. அந்த வீடியோவை சோதித்தபோது, இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் காஸா பகுதிதானா அது? காஸாவின் எந்தப் பகுதி அது என்பது உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அசல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை புவியியல் ரீதியாகவும், பாலஸ்தீனம் வழங்கியிருக்கும் குறைந்த அனுமதியின் மூலம் வடிவமைக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் மூலமும் கண்டறிய முயற்சித்தோம்.

இந்த வீடியோ பதிவிட்டப் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவர் 2011-ம் ஆண்டு எக்ஸ் பக்கத்தை தொடங்கியிருக்கிறார். இதே வீடியோ ஏப்ரல் 1-ம் தேதி டிக்டாக் செயலியில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் கூட அந்த உதவிகள் குறித்த எந்தத் தகவலும் இல்லை. கருத்துப் பெட்டியில் மட்டுமே இது சீனாவின் உதவி எனப் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில்தான் இந்த வீடியோவின் பல்வேறு பகுதிகளில் எடிட் செய்யப்பட்டு வைரலானது.

லாரி மூலம் பிப்ரவரி 19ம் தேதி சீனா காஸாவுக்கு உதவிகள் அனுப்பியது. அதற்குப் பிறகு சீனா எந்த உதவிகள் வழங்கியதாகவும் தகவல் இல்லை. எனவே பகிரப்படும் அந்த வீடியோ போலி என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க

கழுகார்: ஜெயக்குமார் மரண வழக்கு; தற்கொலை என முடிக்க ஆலோசனை? டு அடுத்தது யார்? கிலியில் அமைச்சர்கள்!

தற்கொலை என முடிக்க ஆலோசனை?""நெல்லை காங்கிரஸ் பிரமுகர் மரண வழக்கு...நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ... மேலும் பார்க்க