செய்திகள் :

ஆய்வு செய்த எம்.பி., அரசு அதிகாரிகளைக் கொட்டிய தேனீக்கள்!

post image

மத்தியப் பிரதேசத்தில் அரசுத் திட்டத்தை ஆய்வு செய்த எம்.பி. மற்றும் அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின், பதாரியா தொகுதியில், மக்களவை உறுப்பினர் ராகுல் சிங் லோடி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று (மே 22) காலை 11 மணியளவில் சீதாநகர் நீர்பாசனத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது, திடீரென அங்கிருந்தவர்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால், அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வெவ்வேறு திசைகளில் ஓடியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் காலை 11 மணியளவில் அங்குள்ள அணைக்கு அருகில் நடைபெற்றுள்ளது. இதில், அங்கிருந்த பலருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. பின்னர், அந்தத் தேனீக்கள் அங்கிருந்த விரட்டப்பட்டு, அதிகாரிகள் ஆய்வுகளைத் தொடர்ந்தனர்.

இருப்பினும், இதுகுறித்து வெளியான விடியோவில் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க எம்பி மற்றும் காவல் துறையினர் அங்கிருந்து தப்பித்து ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜப்பான் அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர், அந்நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளனர். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்பூர் பகுதியில் இன்று (மே 22) காவல் துறையினர் சிறப்பு நடவடிக... மேலும் பார்க்க

மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார்.பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீ... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்

புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூர... மேலும் பார்க்க