செய்திகள் :

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

post image

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், மிட்செல் மார்ஷுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியில் மிரட்டினர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பந்துவீச்சாளர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷப் பந்த் 6 பந்துகளில் 16 ரன்கள் (2 சிக்ஸர்கள்) எடுத்து களத்தில் இருந்தார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அர்ஷத் கான் மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

லக்னௌவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையைப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க

தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேபிடல்ஸ் மற... மேலும் பார்க்க

ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை ம... மேலும் பார்க்க

பிளே ஆஃபில் மும்பை; வெளியேறியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆஃபில் நுழைந்தது. டெல்லி ... மேலும் பார்க்க

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார். 22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார்.... மேலும் பார்க்க