செய்திகள் :

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

post image

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார்.

22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார். பேபி மலிங்கா எனப்படும் இவர் 31 ஐபிஎல் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இவர் தற்போது சரியாக பந்துவீசுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடைசி 10 ஐபிஎல் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 5 போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் அதிகமான ரன்களையும் வழங்கியுள்ளார்.

அதிகபடியான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம்

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியதாவது:

மதீஷா பதிரானா மீது அதிகபடியான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம். அதனால்தான், அவரை அணியில் தக்கவைத்தோம்.

மதீஷா பதிரானா சிறிது காலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்து தற்போதுதான் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளார்.

சில மேம்பாடுகளை செய்திருந்தாலும் அவர் நினைக்கும் அளவுக்கோ அல்லது நாங்களோ எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதனால், பதிரானா தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பழைய மாதிரி பந்துவீசுவதில்லை

ஃபார்முக்கு திரும்பினால் அவருக்கும் சிறிது தன்னம்பிக்கை பிறக்கும் என நினைக்கிறேன்.

தற்போது மதீஷா பதிரானாவை விடவும் பேட்டர்கள் நன்றாக விளையாடும் காலத்தில் இருக்கிறார். அவரிடம் இருந்து ஏற்கனவே உச்சத்தை பார்த்திருக்கிறோம்.

மதீஷா பதிரானா தனது முதல்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன செய்தாரோ அதெயெல்லாம் திரும்பவும் கவனித்து செயல்பட வேண்டும்.

அவர் பந்துவீசும் முறை தனித்துவமானது. ஆனால், தற்போது அவரால் அந்தமாதிரி வீச முடிவதில்லை என்றார்.

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க

ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது. தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக வ... மேலும் பார்க்க

2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிக... மேலும் பார்க்க

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார். 20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாட... மேலும் பார்க்க

மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் க... மேலும் பார்க்க