செய்திகள் :

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

post image

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் இதுவரை பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆஃப்ஸுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இன்னும் ஒரு இடத்துக்கு மட்டும் போட்டி நிலவுகிறது.

இன்றிரவு மும்பை வான்கடேயில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 4-வது இடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், இன்றிரவு வான்கடேயில் போட்டி நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுஒருபுறமிருக்க தில்லி அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால், இந்தப் போட்டியை மும்பையில் இருந்து வேறு கிரிக்கெட் திடலுக்கு மாற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தில்லி - மும்பை இடையிலான ஆட்டம், அதிகாரபூர்வமற்ற காலிறுதி போன்ற போட்டியாகும். இந்தப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாய்ப்பிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி பெங்களூருவில் இருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தப் போட்டியையும் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார். 22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார்.... மேலும் பார்க்க

ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது. தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக வ... மேலும் பார்க்க

2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார். 20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாட... மேலும் பார்க்க

மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் க... மேலும் பார்க்க