செய்திகள் :

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

post image

உலகின் எந்த பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏராளமான அதிநவீன வான் பாதுகாப்பு அம்சங்கள் அமெரிக்காவிடம் ஏற்கெனவே உள்ளன. இடைமறித்து நடுவானிலேயே தாக்கி அழிக்கும் தளவாடங்களும் இருக்கின்றன.

இந்த நிலையில், அதிநவீன உலகில் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ’கோல்டன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு திட்டத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், 175 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பின்படி, கிட்டத்திட்ட ரூ. 15 லட்சம் கோடி) செலவில் கோல்டன் டோம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான வடிவமைப்பு இறுதியாகிவிட்டதாகவும், தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக (2029-க்குள்) இந்த கோல்டன் டோம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் அமெரிக்காவிலேயே வடிவமைக்கப்படவுள்ள இந்த கோல்டன் டோம் திட்டத்தை விண்வெளித் துறையின் துணைத் தலைவர் மைக்கேல் கட்லெயின் மேற்பார்வையிடவுள்ளார்.

கோல்டன் டோம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு உலகின் எந்த மூலையில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும், ஏன் விண்வெளியில் இருந்து தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக்கூடிய வல்லமையை அமெரிக்கா பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்.

கோல்டன் டோம் சிறப்பம்சங்கள்

  • ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியபோது, இரும்பு டோமை பயன்படுத்தி இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது, அதனடிப்படையில் நவீன தொழில்நுட்ப அம்சங்கங்களுடன் கோல்டன் டோமை கட்டமைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

  • இரும்பு டோம் குறுகிய தொலைவில் இருந்து குறைவான வேகத்தில் ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து கோல்டன் டோம் முற்றிலும் வேறுபட்டதாக அமைக்கப்படவுள்ளது.

  • ரஷியா, சீனா போன்ற நாடுகள் வைத்திருக்கும் கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது.

  • அமெரிக்காவை குறிவைத்து ஏவப்படும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை துல்லியமாகக் கண்டறிந்து, நடுவானிலேயே அழிப்பதற்காக கோல்டன் டோமை பல செயற்கைக்கோளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

  • இதன்மூலம், விண்வெளியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் அதனை இடைமறித்து, கோல்டன் டோம் தாக்கி அழிக்கும்.

  • அமெரிக்காவைவிட 400 மடங்கு நிலப்பரப்பில் சிறிய இஸ்ரேல், அதன் தட்டையான பாலை வனப்பகுதியை எளிதாக இரும்பு டோம் மூலம் தற்காத்து வருகின்றது.

  • அமெரிக்கா தனது நிலப்பரப்புக்கு ஏற்றவாறு இரும்பு டோம்-ஐ அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள்! போப் வலியுறுத்தல்!

உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!

ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் அண்டிரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மே... மேலும் பார்க்க

காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!

காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார். வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும... மேலும் பார்க்க

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற... மேலும் பார்க்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலி... மேலும் பார்க்க