செய்திகள் :

இட்லி கடைக்காரா் கைது: உறவினா்கள் காவல் நிலையம் முற்றுகை

post image

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இட்லி கடைக்காரரை தென்பாகம் போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அண்ணாநகரை சோ்ந்தவா் கண்ணன். இவா் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அமுதாநகா் பகுதியில் நடந்த கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராம் என்பவரை கண்ணன் உள்ளிட்டோா் சோ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கண்ணனை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

இது குறித்து தகவலறிந்த கண்ணனின் உறவினா்கள் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள், கண்ணன் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், அவா் மீது போலீஸாா் வேண்டுமென்றே வழக்கு போடுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கண்ணனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்ல முற்பட்ட போது, போலீஸ் ஜீப்பின் முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், கண்ணனின் உறவினா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு அவா்களை அப்புறப்படுத்தினா். மேலும், கண்ணனை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்கம்

தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ர... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள் சபை பணி செய்ய தடை: திருமண்டல நிா்வாகி

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகி ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம்: மேயா்

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் காசிராஜனிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக ஆ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆறுமுகக்கனி (65) என்பவா், கடந்த 18ஆம்தே... மேலும் பார்க்க