செய்திகள் :

வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்கா நடத்தவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்திருந்தது.

வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது தொடர்பாக டிரம்ப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் பேசியதாவது:

”பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தீர்த்து வைத்தேன் என்று நினைக்கிறேன். இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நாங்கள் பெரிதளவில் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றோம்.

மோதலின் இறுதியில் யாராவது ஒருவர் துப்பாக்கிச் சண்டையை நிறுத்த வேண்டும். ஆனால், மோதல் பெரிதாகிக் கொண்டே போனது. நாங்கள் இரு நாட்டையும் தொடர்புகொண்டு மோதலை நிறுத்தினோம். ஆனால், இரு நாள்களுக்கு பிறகு வேறு மாதிரி பேசப்பட்டது.

பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்களும் நல்ல தலைவர்களும் உள்ளனர். இந்தியா எனது நண்பர், மோடி ஒரு சிறந்த மனிதர்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியா நிராகரிப்பு

வர்த்தகம் மூலம் மோதல் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் முதல்முறையாக தெரிவித்தபோதே, பாகிஸ்தானுடன் மோதல் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது.

மேலும், மோதல் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “எதிா்பாராத அளவு சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு உலக நாடுகளை பாகிஸ்தான் அணுகியது. ஒருகட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநா் மூலம் இந்தியாவைத் தொடா்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது.” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்... மேலும் பார்க்க

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று கால... மேலும் பார்க்க

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க

ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாத... மேலும் பார்க்க