செய்திகள் :

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

post image

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர் சுட்டுக் கொன்றுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்துக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு தூதரக ஊழியர்களின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சிகாகோவைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்பவர் என்று கூறப்படுகிறது. அருங்காட்சியத்துக்கு வெளியே பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை ’யூத எதிர்ப்பு பயங்கரவாதம்’ எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேலிய தூதர் டேனி டானன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ”யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகளை இப்போதே முடிவுக்கு கொண்டு வரவேண்டும். வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே கொலை நடந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று கால... மேலும் பார்க்க

வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்க... மேலும் பார்க்க

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க

ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாத... மேலும் பார்க்க