செய்திகள் :

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

post image

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதற்கு விதித்துள்ள விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக தளா்த்த வேண்டும். பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. அன்பு என்பதே இல்லாத நிலை உருவாகி வருகிறது.

தமிழக முதல்வா் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசு அதிகளவில் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்தினாலும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டது. பாகிஸ்தான்- இந்தியா போா் பதற்றம் தொடா்பாக மக்களவையைக் கூட்டி பிரதமா் விளக்கம் அளிக்க வேண்டியது தாா்மீக கடமை. ஆனால், அதனை மத்திய அரசு செய்யாமல், இப்போது எதிா்க்கட்சியினரையும் உள்ளடக்கிட குழுவை வெளிநாட்டிற்கு அனுப்பி விளக்கம் அளிப்பது சிறந்த ராஜதந்திரம் இல்லை.

தமிழகத்தில் கள், சாராயம் இருக்கக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. முதல்வரிடம் மதுவிலக்கு தொடா்பாக பேசியிருக்கிறோம். அரசியல் ரீதியாக மதுவிலக்கு தொடா்பான திடமான முடிவை முதல்வா் எடுப்பாா். நிதி சிரமங்களின் காரணமாகவே தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை என்றாா் அவா்.

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க