செய்திகள் :

Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!

post image

நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.

ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக தாஜ் பிராண்டட் ரெசிடென்ஸி சென்னையில் அமைய இருக்கிறது. அம்பா குழுமத்துடன் இணைந்து 'தாஜ் ஸ்கைவியூ 'என்னும் பெயரில் இது உருவாகி வருகிறது.

தாஜ் ரெசிடென்ஸி
தாஜ் ரெசிடென்ஸி

இங்கு 123 அடுக்குமாடி குடியிருப்புகளும், 36 அதி சொகுசு அலுவலகங்களும் மற்றும் 253 ஓட்டல் அறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையின் மையப்பகுதியான நெல்சன் மாணிக்கம் சாலையில் தாஜ் ஸ்கைவியூ கட்டப்பட்டுவருகிறது.

வழக்கமான குடியிருப்புகளை போல் அல்லாமல் இதன் பராமரிப்பு பணிகளை தாஜ் மேற்கொள்ள இருக்கிறது. ஓட்டலில் தங்குவது போலவே 365 நாட்களும் வீட்டில் தங்கலாம், இதுதவிர 75000 சதுர அடி க்ளப் ஹவுஸ் அமைய இருக்கிறது.

தற்போது இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. 50 சதவீத வீடுகள், அலுவலகங்கள் ஏற்கனவே விற்றுதீர்ந்துவிட்டன. 2027-ம் ஆண்டு இறுதியில் இதன் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நிறைவடையும்.

தாஜ் ரெசிடென்ஸி
தாஜ் ரெசிடென்ஸி

உலகெங்கும் பிராண்ட் ரெசிஸிடெண்ஸிகள் பிரபலமாகி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தொடக்கப்புள்ளியாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது “தாஜ் ஸ்கைவியூ”.

Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் விளைவு என்ன?

மோடி தான் எனது நண்பர் என அடிக்கடி கூறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு நட்பு நாடாக கருதவில்லையோ என்பதுதான் அவரின் அறிவிப்பில் நமக்கு தெரிய வருகிறது.அதாவது இந்தியாவில் ஐபோன் தயாரிப்ப... மேலும் பார்க்க

'14 பசுமாடுகள், தினமும் 112 லிட்டர் பால், மாதம் ரூ.2 லட்சம்' - கலக்கும் இமாச்சலப் பிரதேசப் பெண்

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர். வரலாறு பட்டதாரியான இவர், மாட்டுச் சாணம் மற்றும் பால் விற்பனை மூலம் மாதம் இரண்டு லட்சம் வருமானம் ஈட்டும் தொழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிள், மார்பிளை புறக்கணிக்கும் மும்பை, ராஜஸ்தான் வியாபாரிகள்!

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை? நிதி கமிஷன் அறிக்கை

மகாராஷ்டிரா நாட்டின் பணக்கார மாநிலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி குறித்து 16வது நிதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பது தெரிய வ... மேலும் பார்க்க

SRM: பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் தொடக்கம்

தமிழ்நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, தன்னுடைய நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர் பெற்ற SRM குழுமம், ராமாபுரத்தில் முதன... மேலும் பார்க்க

Aswins: தஞ்சாவூரில் 42 வது கிளையைத் தொடங்கிய அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தனது 42-வது கிளையை தஞ்சாவூரில் ( Aswins sweets Tanjore )கோலாகலத்துடன் தொடங்கி இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் அஸ்வின்ஸ... மேலும் பார்க்க