செய்திகள் :

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

post image

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது டிலைட் பால் பெரிய அளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. டிலைட் பால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. தற்போது ஒரு நாளுக்கு 35 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிர்வாகத்தால் கையாளப்பட்டுகிறது. குற்றச்சாட்டுகள் ஏதாவது இருந்தால், கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக சரி செய்யப்படும்.

மனோ தங்கராஜ்

40 லட்சம் லிட்டர் என்ற இலக்கை ஆவினுக்கு நிர்ணயித்திருக்கிறோம். விரைவில் அந்த இலக்கை அடைவோம்.

தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் திறன் ஆவினுக்கு இருக்கிறது. விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டு முழுவதும் சீரான விலையை ஆவின் கொடுத்து வருகிறது. எல்லா சூழல்களிலும் ஆவினால் சப்ளை செய்ய முடியும். பேரிடர் காலங்களில் ஆவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சென்னை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்டோம்.

ஆவின்

நிதி ஆயோக் கூட்டம் குறித்து முதலமைச்சர் தெளிவான கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன் எந்த சூழலிலும் சமரசம் செய்யப்படாது. கடந்த ஆட்சி காலத்தில் இருந்த நிலை இருக்காது என்பதை முதலமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து டெல்லி சென்று இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதை சொல்வதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும். நிதி ஆயோக்கில் சென்று குடும்ப கதையை பேசிக் கொண்டிருந்தார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக குடும்ப கதையைதான் பேசி கொண்டு இருந்தனர்." என்றார்.

எடப்பாடி பழனிசாமி

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

கழுகார்: ஜெயக்குமார் மரண வழக்கு; தற்கொலை என முடிக்க ஆலோசனை? டு அடுத்தது யார்? கிலியில் அமைச்சர்கள்!

தற்கொலை என முடிக்க ஆலோசனை?""நெல்லை காங்கிரஸ் பிரமுகர் மரண வழக்கு...நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ... மேலும் பார்க்க