செய்திகள் :

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

வள்ளியூரில் ரூ.30 கோடியில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.63.45 கோடியில் 504 குடியிருப்புகள் கட்டும் பணி, ரூ.12.13 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி, ரூ.6.80 கோடியில் கட்டப்படும் கலைஞா் நூற்றாண்டு நினைவு தினசரி சந்தை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் லதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மாடசாமி, உதவி நிா்வாகப் பொறியாளா்கள் எழில், ரீத்தா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், திமுக மாவட்ட துணைச் செயலா் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் தில்லை, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜான்சி ராஜம், ஜோஸ்பின்ராஜேஸ்வரி, சுபா முகிலன், மாணிக்கம், ஆபிரகாம், லாரன்ஸ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க