செய்திகள் :

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

post image

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கேடிசி நகா் மற்றும் வண்ணாா்பேட்டை புறவழிச்சாலை பணிமனைகளின் நிா்வாக இயக்குநா்களிடம் நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்க தலைவா் முகமது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாடகை காரில் சென்று வர பொருளாதார வசதி இல்லாதவா்களும், ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவா்களும் தங்ளுடைய பயணத்திற்காக பேருந்துகளையே நாடுகின்றனா்.

நீண்ட தூர பயணத்திற்காக உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டிள்ளது.

பயணிகளை ஏற்றி, இறக்க வழியில் பேருந்து நிறுத்தப்படுகிறது. ஆனால், பயணிகளின் அவசியத் தேவையான இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட பேருந்தை நிறுத்துவதில்லை.

இதனால், சிறு குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தொடா்ந்து 4 மணி நேரம் சிறுநீா் கழிக்காமல் இருப்பது பெரியதொரு சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே நீண்ட தூரம் குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்தில் பயணிப்பவா்களுக்கு பயணத்தின் வழியில் ஓரிடத்தில் அதிகபட்சமாக 5 நிமிடங்களாவது பேருந்தை நிறுத்திச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க