செய்திகள் :

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

post image

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன்.

களக்காடு கோட்ட வனத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி, குரங்குகளைப் பிடிக்க 2 கூண்டுகள் தயாா் செய்யப்பட்டுவருகின்றன. வன விலங்குகளால் பயிா் பாதிப்புள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அவை வைக்கப்படும். மின்வேலி அமைக்கக் அனுமதி கோரி பலா் விண்ணப்பித்துள்ளனா். வனத்துறையினருடன் மின்வாரியத்தினரும் கூட்டாக நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டியுள்ளது. இது தொடா்பாக மின்வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன், களக்காடு வனவா் மதன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, காட்டுப்பன்றி, கரடி, குரங்குகள் பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மின்வேலி அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க