செய்திகள் :

நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.. மானாமதுரை பரபரப்பு!

post image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ அணைக்கும் பணி

மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக்கடை தீ பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது கடை முழுமையாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. பல மதுபாட்டில்கள் வெடித்து சிதறியும் கிடந்தது.

தீயணைப்புத் துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், மதுபாட்டில்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்திருந்தது.

நேற்றைய தினம்தான் புதிய மதுபானங்கள் குடோனிலிருந்து வந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

எரிந்த நிலையில் மது பாட்டில்கள்

இந்த நிலையில் எப்படி தீ பிடித்தது? யார் தீ வைத்தார்கள்? எதற்காக தீ வைத்தார்கள்? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மானாமதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமத்தையே மிரட்டிய போதை கும்பல்; புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் - இளைஞன் கொலையில் பகீர் பின்னணி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகிலுள்ள மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் கடந்த 19-ம் தேதி தங்களின் கிராமத்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்ப... மேலும் பார்க்க

TASMAC: "கூடுதல் பணம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர்" - வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற ஊழியர்

திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், விஷம் அருந்திய ந... மேலும் பார்க்க

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின்... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடம... மேலும் பார்க்க

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேர... மேலும் பார்க்க