செய்திகள் :

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

post image

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பாலாஜி அடைக்கலம் தருமாறு உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு வந்த பாலாஜி-ஹேமலதா தம்பதியை சரவணுக்கு பழக்கமான அமுதரசன் மற்றும் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் ஆகிய மூவரும் உதவி செய்வதுபோல் கடத்திச் சென்று அமுதரசன் தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும், பின்னர் ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவுக்கு போன் செய்து ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய ஹேமலதா, பாலாஜி தம்பதி தங்களை யுவராஜ், அமுதரசன், சரவணன் ஆகிய மூவர் கடத்தி வைத்து பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

யுவராஜ்

இந்த வழக்கில் யுவராஜ் இரண்டாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சாட்சியங்கள், விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், ஹேமலதா, பாலாஜி ஆகிய இருவரும் பிறழ்சாட்சிகளாக மாறியதால், யுவராஜ் உள்ளிட்ட மூவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், யுவராஜ் உள்ளிட்ட மூவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி சொர்ணக்குமார் உத்தரவிட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளதால், கடத்தல் வழக்கு தீர்ப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் யுவராஜ் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடம... மேலும் பார்க்க

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேர... மேலும் பார்க்க

விவாகரத்தான, கணவனை இழந்த பெண்கள் டார்கெட் - 100 பெண்களிடம் திருமண ஆசை காட்டி பணமோசடி செய்த நபர்

மும்பை எல்.டி மார்க் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பெண் ஆசிரியைக்கு மெட்ரிமோனியல் தளம் மூலம் கொரோனா காலத்தில் வினீத் மல்ஹோத்ரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பேச... மேலும் பார்க்க

குழந்தை இல்லாததால் மறுமணம் செய்த கணவன்; மருமகளை கொன்று, விபத்து நாடகமாடிய மாமனார்-மாமியார் கைது

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. ரேணுகாவுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அவருக்கு குழந்தை ப... மேலும் பார்க்க

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க