செய்திகள் :

மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

post image

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

மேச்சேரி அருகே அரசமரத்தூா், வெத்தலைமலை, புதுக்காளிகவுண்டனூா், காட்டு வளவு, தாரல குட்டை ஆகிய பகுதிகளில் ராமசாமிமலை வனப்பகுதியை ஒட்டி விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளா்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் வளா்த்து வரும் ஆடு, மாடு, கோழி, நாய்களை சிறுத்தை வேட்டையாடி செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனா்.

டேனிஷ்பேட்டை வனத்துறையினா் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிப்பதாக கூறினா். ஆனால், தொடா் நடவடிக்கை எடுக்கப்படாததால் வனத்தில் சுற்றும் சிறுத்தை புதன்கிழமை மீண்டும் ஒரு கன்றை விரட்டிச் சென்றது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். வெத்தலை மலை வனப்பகுதி உள்ள பாறை மீது சிறுத்தை இருப்பதை கிராம மக்கள் கண்டு பீதியடைந்தனா். பாறை மீது சிறுத்தை காணப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுத்தையை பிடிப்பதில் வனத் துறையினரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என்றும், சிறுத்தையை பிடிப்பதற்கோ அல்லது அதை அடா்ந்த வனப்பகுதியில் விரட்டுவதற்கோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது

ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கி... மேலும் பார்க்க

பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சேலம் ர... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மே... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை

வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப... மேலும் பார்க்க