தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22).
கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்திற்காக தனது தாயார் வீட்டிற்குச் சுஜாதா சென்று இருந்தார்.
குழந்தை பிறந்தவுடன் தனது மனைவியிடம் தனது ஊருக்கு வரும்படி சேகர் கேட்டுக்கொண்டார். ஆனால் சில நாட்கள் இருந்துவிட்டு வரட்டும் என்று கூறி சுஜாதாவின் பெற்றோர் கூறிவிட்டனர்.

சேகர் தனது மனைவி சுஜாதாவை அழைப்பதற்காக மனைவியின் ஊருக்குச் சென்றார். இரவில் அவர் குடிபோதையில் வீட்டிற்குச் சென்றவுடன், தனது மனைவி அருகில் அப்படியே போய் படுத்துவிட்டார்.
ஆனால் மனைவி அருகில் குழந்தை போர்வை போர்த்திய நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது. இதனை சேகர் கவனிக்காமல் குழந்தை மீது படுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்துதான் சுஜாதா இதனைக் கவனித்தார். குழந்தையைப் பார்த்தபோது அதன் முகத்தில் ரத்தம் வந்த நிலையில், மூச்சுத்திணறி இறந்து இருந்ததைப் பார்த்து பதறி போயுள்ளார்.
இது குறித்து சுஜாதாவின் தாயார் ராஜாமணி போலீஸில் புகார் செய்துள்ளார். இது குறித்து ராஜாமணி கூறுகையில், ''சேகர் இரவில் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார். தனது மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறி கத்தினார்.
ஆனால் அவரை நாங்கள் வீட்டிற்குள் விடவில்லை. அதிகாலை 5 மணிக்கு எனது மகன் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கதவைத் திறந்தபோது சேகர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
வீட்டிற்குள் சென்றவர் அப்படியே சுஜாதா அருகில் படுத்துவிட்டார். குழந்தை அருகில் படுத்து இருந்ததைக் கவனிக்கவில்லை.

சுஜாதா எழுந்தபோதுதான் இதனைக் கவனித்தார். லைட்டை போட்டு பார்த்தபோது குழந்தை மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இருந்தது.
உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்'' என்றார்.
தந்தையின் கவனக்குறைவால் குழந்தை பரிதாபமாக இறந்திருந்து போனது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs