செய்திகள் :

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

post image

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர்.

சம்பவம் நடந்த குவாரி

ஏற்கனவே இப்பகுதியில் மழை பெய்திருந்த நிலையில் இன்று காலையில் பாறையை வெடி வைத்து உடைக்குமபோது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை அப்பகுதி மக்களும், மீட்புப்படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு, கடும் சிரமத்துக்கிடையில் மீட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

சம்பவம் நடந்த குவாரியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடன் வந்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம், "மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, ஒரிசாவைச் சேர்ந்த அர்ஜித் ஆகியோர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குவாரி பகுதியில் இறந்தவர்களை பார்வையிட உறவினர்களையும் செய்தியாளர்களையும் காவல்துறை அனுமதிக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல்வர் நிதியுதவி

இதனிடையே, கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார். ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோ... மேலும் பார்க்க

திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி... மூவர் கவலைக்கிடம்!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: உரிமம் பெறாத பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சர்புதீன் இவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு விற்பனை செய்து வந்தார். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவரது மகன் அப்பாஸ் வெளிநாடு... மேலும் பார்க்க

சோலாப்பூர் துணி மில்லில் அதிகாலையில் தீ விபத்து: மில் அதிபர், பேரன் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகில் உள்ள அக்கல்கோடில் சென்ட்ரல் டெக்ஸ்டைல் மில் இருக்கிறது. இத்தொழிற்சாலையில் அதிகாலை 3.45 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர்... மேலும் பார்க்க

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்

ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 5.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் மொத்தமாக 17 நபர்கள் உ... மேலும் பார்க்க

`டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த வாகனம்' சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியான பரிதாபம்

கோவை மாவட்டம், சங்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர், தன் மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான கோயில் பிச்சை அவரின் மனைவி லெற்றியா கிருபா, மோசஸின் மகன் கெர்சோம், அவரின் மனைவி சைனி கிருபா, கெர்ச... மேலும் பார்க்க