செய்திகள் :

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்

post image

ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை 5.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் மொத்தமாக 17 நபர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் மின்கசிவு இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Charminar Fire Accident
Charminar Fire Accident

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டெடுத்திருக்கிறார்கள். காயமடைந்த 10 நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நகைக் கடைகள் அதிகமாக அமைந்திருக்கின்றன. இந்த நகைக் கடைகள் அனைத்துமே 100 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, "நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.

இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.

இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி பெற முயல்வேன்" எனக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அது குறித்து பிரதமர் அலுவலகம், "தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்" என எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த வாகனம்' சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியான பரிதாபம்

கோவை மாவட்டம், சங்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர், தன் மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான கோயில் பிச்சை அவரின் மனைவி லெற்றியா கிருபா, மோசஸின் மகன் கெர்சோம், அவரின் மனைவி சைனி கிருபா, கெர்ச... மேலும் பார்க்க

சென்னை: திடீரென உள்வாங்கிய சாலை; கார் கவிழ்ந்து விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்வது என்ன?

சென்னைமத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது.நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.அந்தப் பள்ளத்தி... மேலும் பார்க்க

மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓட்டுநர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை ஒரு அரசுப் பேருந்து சிவகாசிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஓட்டுநர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.அதில் சுமா... மேலும் பார்க்க

'படுகாயமடைந்த குழந்தையும் இறந்தது' - நெல்லை கார் விபத்தில் சிக்கிய முழு குடும்பமும் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த மைலோடு சரல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (68). கட்டடம் கட்டும் காண்டிராக்டர். இவரது மனைவி மார்கிரேட் மேரி (57). இவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு... மேலும் பார்க்க

சாத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த பெண்; காப்பாற்ற முயன்ற கணவன், மாமியாருக்கு நேர்ந்த சோகம்

சாத்தூர் அருகே துணி துவைப்பதற்காகச் சென்ற பெண் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றுக்குள் குதித்த கணவர் மற்றும் அப்பெண்ணின் மாமியார் என இருவர் நீரில் மூழ்கிப் பலியான ... மேலும் பார்க்க

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வ... மேலும் பார்க்க