செய்திகள் :

அபார்ஷன் : தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டியவை!

post image

ரிலேஷன்ஷிப்பில் தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அபார்ஷன். அதனால் பெண்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் என்னென்ன? - விளக்கிச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி.

’’அபார்ஷன் பண்ற முடிவோட மகப்பேறு மருத்துவர்களை நாடி வர்ற திருமணமாகாதவர்களைப் போலவே, திருமணமான தம்பதிகளும் வருவாங்க. தங்களுக்கு உருவான முதல் குழந்தையைக் கலைக்கச் சொன்ன தம்பதிகள்கூட இருக்காங்க. கணவர், குடுபத்தாரோட வற்புறுத்தல் காரணமா கருவைக் கலைக்கச் சம்மதிக்கிற பெண்களும் இருக்காங்க.

`அலட்சியம்தான் முக்கியமான காரணம்’

`கருவைக் கலைச்சா பொண்ணோட உயிருக்கு ஆபத்து; முடியாது'னு என் கணவர்கிட்ட சொல்லிடுங்க டாக்டர்'னு பர்சனலா சொல்ற சில பெண்களையும் பார்த்திருக்கேன். அவங்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு மாத்திரை... உடனே அபார்ஷன்னு அதை ஒரு பீரியட்ஸ்போல நினைச்சிட்டிருப்பாங்க.

கருக்கலைப்பு

அபார்ஷன் முடிவோட வர்ற தம்பதிகள்ல 100-க்கு 10 பேர்தான் எங்க ஆலோசனைக்குப் பிறகு, குழந்தையைப் பெத்துக்கலாம்னு முடிவெடுக்குறாங்க. மீதமுள்ள 90 பேர் அபார்ஷன் பண்ற முடிவுல உறுதியா இருக்காங்க. வேலை, படிப்பு உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை அபார்ஷனுக்கான காரணங்களாகச் சொன்னாலும், சம்பந்தப்பட்டவங்களோட அலட்சியம்தான் இதுக்கு முக்கியமான காரணமா இருக்கு.

ஒரு கரு உருவாகுறதுல ஆண்-பெண் இருவரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதை `அபார்ஷன்' பண்ணும்போது ஏற்படுற உடல் ரீதியிலான பாதிப்புகளைப் பெண்கள் மட்டுமே அனுபவிக்கிறாங்க. இதை தன் துணையை அபார்ஷனுக்கு வற்புறுத்துற ஒவ்வோர் ஆணும் உணரணும்.

கருவைக் கலைக்கும்போது அது முழுவதுமாக வெளிவராமல் கருப்பையிலேயே தங்கிவிட வாய்ப்பிருக்கு. இதனால் அந்தப் பெண் அடுத்த முறை கருவுறுவதில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு அதிக ரத்தபோக்கு, தாங்க முடியாத வலி, கர்ப்பப்பையில் தொற்று ஏற்படலாம். சட்டத்துக்குப் புறம்பான வகையில் கருக்கலைப்பு செய்ய நினைக்கிற சில தவறான மருத்துவர்கள்கிட்டபோய் மாட்டிக்கவும் வாய்ப்பிருக்கு. சரியான, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

pregnancy

வயித்துல வளர்ற குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை, அந்த கருவின் காரணமா தாயோட உயிருக்கு ஆபத்து இருக்கு, குழந்தைக்கு சரிசெய்யவே முடியாத உடல்நல பாதிப்பு இருக்கு என்னும் பட்சத்தில் தாராளமாகக் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம்.

குழந்தை வேண்டாம், செக்ஸ் மட்டும் போதும்னு முடிவெடுக்குறவங்க அதுக்கான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள்ல கவனமா இருக்கணும். கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்தும் பட்சத்தில் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கலாம். உடலுறவு மேற்கொள்ளும்போது ஆணுறை கிழிந்துவிட்டால் அதன் வழியே விந்து வெளியேறி கரு உருவாக வாய்ப்பிருக்கு. இப்படி ஆகும் பட்சத்தில் கரு உருவாவதைத் தவிர்க்க அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்" என்று முடிக்கிறார் மருத்துவர் கனிமொழி.

பிரேக்-அப்; உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்... சரியா? - உளவியல் ஆலோசகர் வழிகாட்டல்

'இதுவும் கடந்து போகும்' - ஒரு சிறந்த வாக்கியம். மனநிலையும்கூட. குறிப்பாக, காதல் தோல்வியில் இருப்பவர்கள் அவசியம் கொள்ளவேண்டிய மனநிலை இது. 'நமக்குள்ள சரியா வராது, பிரேக்-அப் பண்ணிக்கலாம்' என்று இன்று பல... மேலும் பார்க்க

Relationship: இரண்டாவது திருமணத்திலும் பிரச்னையா? அப்படியென்றால் - சைக்காலஜிஸ்ட் அட்வைஸ்

பிரபலங்கள் முதல், சாமானிய மக்கள் வரை பலரும், பல காரணங்களால் தங்களின் திருமண பந்தத்தில் இருந்து சுமுக முடிவுடன் பிரிவதைக் காண்கிறோம். இவர்களில் சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, அவர்கள் வாழ்க்கைய... மேலும் பார்க்க

Relationship: கணவன் - மனைவி உறவை இணையம் பிரிக்கிறதா? எக்ஸ்பர்ட் சொல்லும் தீர்வு!

இன்றைக்கு, தங்கள் இணையுடன் நேரம் செலவிடும் நபர்களின் எண்ணிக்கையைவிட இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். டிஜிட்டல் உலகம் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையை எந்தெந்த வித... மேலும் பார்க்க