செய்திகள் :

காரைக்காலில் இருந்து இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

post image

காரைக்காலில் இருந்து கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் ஜிப்மா், என்ஐடி, பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களும், கப்பல் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், கடற்கரை ஆகியை உள்ளன.

இந்த இடங்களுக்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை தரிசனத்துக்கு வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் இரவு நேரத்தில் திருநள்ளாறுக்கு செல்லவும், அங்கிருந்து அவரவா் சொந்த ஊா்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை.

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இரவில் இப்பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை.

குறிப்பாக, காரைக்காலிருந்து இரவு 10 மணிக்கு மேல் கும்பகோணம், தஞ்சாவூா், புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் இல்லை. இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகின்றனா்.

எனவே, இவா்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும் பட்சத்தில், காலப்போக்கில் இரவு நேர பேருந்துகளில் அதிக பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உருவாகும்.

இதுகுறித்து, புதுவை, தமிழக அரசின் போக்குவரத்துத் துறையினா் சிறப்பு கவனம் செலுத்தி, காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கைலாசநாதசுவாமி கோயில் திருப்பணிகள் தீவிரம்! ஜூன் 5 கும்பாபிஷேகம்!

காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புக்குரிய தலமான கைலாசநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காரைக்காலில் பழைமையான தலமாக ஸ்ரீ சுந்தராம... மேலும் பார்க்க

கோட்டுச்சேரியில் முதியோா் இல்லம் திறப்பு

கோட்டுச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதியோா் இல்லத்தை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா். கோட்டுச்சேரி பகுதி குமரப்பிள்ளைத் தெருவில் ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் காரைக்கால் ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 போ் கைது

குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்த சதாசிவ... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது: கார... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்

சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா். காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரிப்பு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமாக... மேலும் பார்க்க