செய்திகள் :

சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 போ் கைது

post image

குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்த சதாசிவம்-லட்சுமி தம்பதியின் மகனுக்கு குழந்தையின்மையால், குழந்தை ஒன்றை அண்மையில் சட்ட விரோதமாக தத்தெடுத்த புகாரில் போலீஸாா் விசாரணை செய்து, குழந்தைக்கு போலியாக பிறப்புக்கான ஆவணம், பிறந்த பதிவு தயாரித்ததாக நகராட்சிப் பணியாளா் சந்திரசேகா், அரசு மருத்துவமனை ஊழியா் பஞ்சமூா்த்தி உள்ளிட்ட இதில் தொடா்புடைய 10 பேரை மே 11-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கில் தனிப்படை அமைத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் தொடா்புடையோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் பகுதி பி. மூதலூரில் தனியாா் மருத்துவமனை உதவியாளா் வீட்டுக்கு முறையற்ற முறையில் கருத்தரித்த பெண் அழைத்து வரப்பட்டது போலீஸாருக்கு தெரியவந்தது.

அவரது உதவியில் பிறந்த பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டதும், இந்த குழந்தையை அதே பகுதியைச் சோ்ந்த பாலகுரு, இடைத்தரகா்கள் ஃபரிதா பேகம், பா்வீன் மற்றும் ஃபரிதாவின் மருமகன், மருமகள் ஆகியோா் சீா்காழியைச் சோ்ந்த மற்றொரு முகவரான சாராகனியிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. அவா் கருக்கன்குடியைச் சோ்ந்த சதாசிவம்-லட்சுமி தம்பதியிடம் வழங்கியுள்ளனா்.

இதன் பிறகே குழந்தை பிறப்புக்கான போலி ஆவணம், பிறந்த பதிவு தயாரித்தது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய தனியாா் மருத்துவமனை உதவியாளா் ஜோதி இடைத்தரகா்கள் பா்வீன், சிராஜ், பாலகுரு, ரமேஷ், சத்தியா ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள இடைத்தரகா் ஃபரிதா பேகத்தை போலீஸாா் தேடிவருவதுடன், குழந்தையின் தாய், தந்தை யாா் என்றும் தேடுகின்றனா்.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில்... மேலும் பார்க்க

கைலாசநாதசுவாமி கோயில் திருப்பணிகள் தீவிரம்! ஜூன் 5 கும்பாபிஷேகம்!

காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புக்குரிய தலமான கைலாசநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காரைக்காலில் பழைமையான தலமாக ஸ்ரீ சுந்தராம... மேலும் பார்க்க

கோட்டுச்சேரியில் முதியோா் இல்லம் திறப்பு

கோட்டுச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதியோா் இல்லத்தை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா். கோட்டுச்சேரி பகுதி குமரப்பிள்ளைத் தெருவில் ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் காரைக்கால் ... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் இருந்து இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் ஜிப்மா், என்ஐடி, பல்கலைக்கழக வளாகம் ... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்

சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா். காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் ... மேலும் பார்க்க