செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 4-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவுதொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,764 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.82 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 76.74 டிஎம்சியாக உள்ளது. மேட்டூரில் மழை அளவு 100.6 மி.மீ

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க

'அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை' - திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் திமுக... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் எப்போது திறப்பு? புதிய தகவல்

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது என்றும் ரயில் நிலையத்திற்கான மு... மேலும் பார்க்க

டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டாஸ்மாக்... மேலும் பார்க்க

அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாண... மேலும் பார்க்க