செய்திகள் :

ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

post image

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர் பிரச்னை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவரைச் சந்தித்தார். அப்போது அவருக்குத் தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவானது என்றும் வயதாகும்போது, ​​பெரும்பாலான ஆண்களுக்கு புற்றுநோய் செல்கள் சிறியதளவில் இருக்கும் என்றும் ஆர்லாண்டோ சிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜமின் பிரம்பட் கூறினார்.

புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா கொல்லப்பட்டு இன்றுடன்(மே 19) ஓர... மேலும் பார்க்க

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப... மேலும் பார்க்க

திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர். பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் வேண்டுதல்கள் வைப்பதும், அது... மேலும் பார்க்க

எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரய... மேலும் பார்க்க

கா்னல் சோஃபியா குரேஷி விவகாரம்: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

மே 29ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார். பிரதமர் மோடிய... மேலும் பார்க்க