செய்திகள் :

`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

post image

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் நீதிபதிகளுககும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கும் அவர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு மாறுபாடுகள் இருக்கின்றது என்று குற்றம்சாட்டப்பட்டது.

குறிப்பாக 13 ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி பிறகு ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் பொழுது, முந்தைய 13 ஆண்டுகள் மாவட்ட நீதிபதி பணி காலத்தை கணக்கில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் மாதத்திற்கு வெறும் பதினையாயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

அதேபோல கூடுதல் நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதிலும் நிறைய பாகுபாடுகள் இருப்பதாகவும், இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவை அனைத்தையும் சரி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஒரே மாதிரியான ஓய்வூதியம்

இந்த வழக்கு பல மாதங்களாக உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், ``நீதிபதிகள் தொடர்புடைய இந்திய அரசியல் சாசன சட்ட பிரிவுகளை முழுமையாக ஆராய்ந்ததில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும், இதில் பழைய ஓய்வூதிய திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகியவை, இத்தகைய பாகுபாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இருக்கின்றது. எனவே உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு நீதிபதி எத்தனை ஆண்டுகள் பொறுப்பில் இருந்தாலும் எந்த வகையில் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

இந்த உத்தரவு கூடுதல் நீதிபதிகளுக்கும் பொருந்தும். அனைத்து நீதிபதிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் சலுகைகள் விதவை ஓய்வூதியம் உள்ளிட்டவையும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்” என்றும் தீர்ப்பில் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, `சில ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபகரமானது. அனைத்து விஷயங்களிலும் சட்டரீதியான அணுகுமுறையைக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில், ஒன்றிய அரசு மனிதாபிமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `உங்க முதலை கண்ணீரை நம்ப தயாராக இல்லை’ - பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

`பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய சகோதரியை வைத்து பதில் சொல்லி இருக்கிறோம்’ என ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மிக மோசமான முறையில் பேசி இருந்தார். ராணுவ அதி... மேலும் பார்க்க

NEET: `கரண்ட் கட் ஆனதால் பாதிப்பு' - மாணவி வழக்கு; ரிசல்ட் வெளியிட தடை விதித்த உயர்நீதிமன்றம்!

`நீட் தேர்வின் போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவியொருவர் அளித்த புகாரை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு, 2024 நீட்-யுஜி தேர்வு முட... மேலும் பார்க்க

மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி

மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரை விசாரிப்பதற்கான ஒப்புதலை அரசிடம் பெற வேண்டுமா? அல்லது சபாநாயகர் இடம் பெற வேண்டுமா? என்ற முக்கிய கேள்வியை உச்ச நீ... மேலும் பார்க்க

`கணவரின் திருமணம் மீறிய உறவு; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது’- டெல்லி நீதிமன்றம்

கடந்த ஆண்டு டெல்லியில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், 'எங்கள் பெண்ணின் கணவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திர... மேலும் பார்க்க