செய்திகள் :

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தைத் தொடங்கிய பின்னர் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார்.

ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கியதன் காரணமாக, 50 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும், தொலைதூரப் பகுதிகளில் கூட, இந்திரா காந்தி நினைவுகூரப்படுகிறார்.

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல இருக்க வேண்டும் என்று தான் உணர்வதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடன் போர் செய்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தவர். ஒன்று பாகிஸ்தான் எனவும், மற்றொன்று வங்கதேசமாகவும் பிரிந்தது. நாட்டைப் பாதுகாக்கும் போரில் 54 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரா காந்தி நிரூபித்துள்ளார் என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.

இந்தியா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு சூரிய சக்தி பம்புசெட்கள் வழங்கப்படும் என்றும், அச்சம்பேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சூரிய சக்தி பம்புசெட்களை அரசு இலவசமாக வழங்கும். இதனால் ஏழைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

பஹல்காமில் பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போர் உருவாகக் காரணமாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவ... மேலும் பார்க்க

பாகிஸ்தன் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் உளவ... மேலும் பார்க்க

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்... மேலும் பார்க்க

புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா கொல்லப்பட்டு இன்றுடன்(மே 19) ஓர... மேலும் பார்க்க

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப... மேலும் பார்க்க