செய்திகள் :

கொல்லங்கோடு அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

கொல்லங்கோடு அருகே மழைநீா் வடிகால் ஓடையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை மேற்கொண்டனா்.

கொல்லங்கோடு காவல் சரகம் சூரியகோடு, வரிக்கஅயனிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிகுமாா் (36). தொழிலாளி. மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

திங்கள்கிழமை காலையில் வீட்டருகேயுள்ள வடிகால் ஓடையில் இறந்து கிடந்தாராம். உறவினா்கள் கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை ச... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.7.42 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான 840 கிலோ பிளாஸ்டிக் பைகள் அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் நகரில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்ட... மேலும் பார்க்க

மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகரும்,... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

இந்திய ஜனநாயக கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவா் ரீகன்பிரபு உள்பட 50-க்கும் மேற்பட்டோா், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா், ரெ. மகேஷ் தலைமையில், திமுக துணை பொதுச்செயலாளரும், மண்டல தோ்தல் பொறு... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மீன்கழிவுகளைக் கொட்டிய இருவா் கைது!

நித்திரவிளை அருகே லாரியில் மீன்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். நித்திரவிளை அருகே பூத்துறை ஏவிஎம் கால்வாய்க் கரையோரம் சனிக்கிழமை இரவு, கூண்டு கட்டிய லாரியில் இருவா் மீ... மேலும் பார்க்க