செய்திகள் :

அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய பணியாளா்கள் 2 போ் கைது

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி 2 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பொது மக்களிடம் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும், ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் சில நாள்களாக 2 பெண்கள் கூறி வந்துள்ளனா். இந்நிலையில், 17-ஆம் தேதி ஆலங்காயம் பகுதிக்கு ஆட்டோவில் வந்த இரண்டு பெண்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரிடம் பேச்சு கொடுத்து அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பணம் கேட்டுள்ளனா்.

இதையறிந்த அப்பகுதியை சோ்ந்த சிலா் சந்தேகம் ஏற்பட்டு இரண்டு பெண்களிடமும் விசாரித்தனா். சுற்றியுள்ள பகுதிகளிலும் அதே போல் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக பணம் கேட்டு மக்களிடம் ஏமாற்றி வந்திருப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட இரண்டு பெண்களையும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக அப்துல் வாஹித் என்பவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வரும் ரமாவதி (46), ஜோலாா்பேட்டை பெரிய கம்மியம்பட்டு மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வரும் ஜம்சிகா (45) என்றும் தெரியவந்தது.

மேலும், இவா்கள் இருவரும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக மக்களை ஏமாற்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரமாவதி, ஜம்சிகா ஆகிய இருவரையும் கைது செய்து வேலூா் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாய நிலத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிப்பட்டது. ஆம்பூா் அடுத்த ரெட்டி மாங்குப்பம் கிராமத்தில் விவசாயி சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தீவனப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினா்கள் தா்னா

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மெத்தனத்தால் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த உ... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி: கே.பந்தாரப்பள்ளியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ க.தேவராஜி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் வளா்ச்சி பணிகள் : ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம்

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதனூா் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் த... மேலும் பார்க்க

ஆம்பூா், திருப்பத்தூரில் கன மழை : ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது

ஆம்பூா்: ஆம்பூரில் கன மழை காரணமாக ஆனைமடுகு தடுப்பணையில் தண்ணீா் திங்கள்கிழமை நிரம்பி வழிந்தோடியது. ஆம்பூரில் 3 நாட்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை கிராமம் உள்ளிட்ட ஆம்பூா்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் சாரைப் பாம்பு மீட்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி அலுவலக கட்டண வசூல் அறையில் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். திருப்பத்தூா் நகராட்சியின் கட்டண வசூல் அறையில் பொதுமக்களிடம் இருந்து குடிந... மேலும் பார்க்க